வங்கித் தலைமையக வங்கியியல் பிரிவு, கோபி செட்டிபாளையம், பஜார், காங்கயம், சென்னிமலை, தாராபுரம், ஊத்துக்குளி, சத்தியமங்கலம், சிவகிரி, பு.புளியம்பட்டி, கவுந்தப்பாடி மற்றும் பவானி ஆகிய கிளைகள் குளிர் சாத வசதிகளுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதரக் கிளைகள் மற்றும் வங்கித் தலைமையகம் ஆகியவையும் நவீனப்படுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
வங்கித் தலைமையகம் உட்பட அனைத்துக் கிளைகளும் கணினிமயமாக்கப்பட்டு, மைய வங்கியியல் முறையிலான வங்கியியல் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிகழ் நேர மொத்தத் தீர்வு / தேசிய மின்னணு நிதிப்பரிமாற்றம் (RTGS/NEFT) மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் நிதிப்பரிமாற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு மானியத் தொகைகள் (DBTL) வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.