- 2015-16 ஆம் ஆண்டு சேலத்தில் 20.11.2015 அன்று நடைபெற்ற 62-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் மாநில அளவில் சிறந்த வங்கிக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
- 2017-18 ஆம் ஆண்டு சென்னையில் 27.02.2018 அன்று நபார்டு வங்கி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் விவசாய கடன் அட்டைகள் வழங்குதலில் சிறந்த செயல்திறனுக்கான மாநில அளவிலான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
- 2018-19 ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களின் கணக்குகளில் ஆதார் மற்றும் கைப்பேசி எண் இணைப்பில் சிறந்த செயல்பாட்டிற்கான விருது நபார்டு வங்கியால் வழங்கப்பட்டது.
- 2019-20 ஆம் ஆண்டிற்கு நிதியியல் கல்வி முகாம் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு நபார்டு வங்கியால் தமிழக அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
- 21.08.2019 அன்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஆய்வுக் கூட்டத்தில் மாநில அளவில் சிறந்த செயல்பாடுகளுக்கான கேடயம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
- நபார்டு வங்கியின் 40-ஆவது “Foundation Day” விழாவில், நமது வங்கிக்கு மாநில அளவில் சிறந்த செயல்பாடுகளுக்கான ((Financial and Developmental initiatives) விருது 13.07.2021 அன்று நபார்டு வங்கியினரால் வழங்கப்பட்டது.
- மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி சேவை செய்தமைக்காக தமிழக அளவில் நடைபெற்ற 75-ஆவது இந்திய சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
- 2020-21-ஆம் ஆண்டிற்கு நிதியியல் கல்வி முகாம் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு நபார்டு வங்கியால் தமிழக அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
- 2021-22-ஆம் ஆண்டிற்கு நிதியியல் கல்வி முகாம் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு நபார்டு வங்கியால் தமிழக அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
வங்கி பணப் பரிமாற்றங்களில் புதிய தொழில்நுட்ப சேவைகள்















